பலதும் பத்தும்

தனது சொத்தில் பெரும் பகுதியை ஆப்பிரிக்காவுக்கு வழங்குவதாக பில் கேட்ஸ் அறிவிப்பு!

கேட்ஸ் அறக்கட்டளை அடுத்த இரண்டு தசாப்தங்களில், அதாவது 2045 வரை வழங்க திட்டமிட்டுள்ள 200 பில்லியன் டொலர்களில் ஆப்பிரிக்கா மிகப்பெரிய பயனாளியாக இருக்கும் என்று மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் (Bill Gates) திங்களன்று கூறினார்.

ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின்படி, தற்போது சுமார் $175 பில்லியன் சொத்து மதிப்புள்ள 69 வயதான உலகின் ஐந்தாவது செல்வந்தரான பில் கேட்ஸ், உலகத்தை சிறந்த இடமாக மாற்றுவதற்காக தனது மொத்த செல்வத்தில் 99 சதவீதத்தை நன்கொடையாக வழங்க விரும்புவதாக அண்மையில் கூறியிருந்தார்.

இந்த நிலையில் எத்தியோப்பியாவின் தலைநகர் அடிஸ் அபாபாவில் திங்களன்று இது குறித்து பேசிய அவர், சுகாதாரம் மற்றும் கல்வி மூலம் மனித ஆற்றலை வெளிக்கொணர்வதன் மூலம், ஆப்பிரிக்காவில் உள்ள ஒவ்வொரு நாடும் செழிப்புப் பாதையில் செல்ல வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.

ஆப்பிரிக்காவின் இளம் கண்டுபிடிப்பாளர்கள் கண்டத்தில் சுகாதாரப் பராமரிப்பை மேம்படுத்த செயற்கை நுண்ணறிவை (AI) எவ்வாறு உருவாக்குவது என்பது குறித்து சிந்திக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இந்த அறிவிப்பினை மொசாம்பிக்கின் முன்னாள் முதல் பெண்மணி கிராசா மச்செல் அவரது வரவேற்றுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button