நேபாளத்தில் வினோதமான சடங்குகள்!

நேபாளம் என்ற பெயர் வந்து 250 ஆண்டுகளே. இந்தியாவைப்போல் பல சிறிய அரசுகள் இருந்த பிரதேசம் . கூர்க்கா பிரதேசம் என்ற நேபாளத்தின் வடபிரதேசத்தை ஆண்ட கடைசி மன்னன் பிருதிவி நாராயணன் ஷா தனது ஆட்சியில் முழுப்பிரதேசத்தையும் ஒன்றிணைத்து நேபாளத்தை இந்து நாடாக பிரகடனப்படுத்தினான். – அக்காலத்தில் இஸ்லாமியர்கள் இந்தியாவை ஆண்டார்கள். இதன் பின்பு முழு நேபாளம் கூர்க்கா நாடக சொல்லப்படுகிறது . இந்திய ராஜபுத்திர வம்சத்தில் வந்த பிருதிவி நாராயணனது வம்சமே பிற்காலத்தில் தொடர்ந்து நேபாள மன்னர்களாக இருந்தார்கள் .
நேபாளத்தின் காட்மாண்டு பள்ளத்தாக்கில் மட்டும் மூன்று அரசுகள் இருந்தன. காட்மாண்டில் இருந்து 11 கிலோ மீட்டரில் உள்ளது பக்ரபூர் . இங்கு பல ஆலயங்கள் மற்றும் அரண்மனைகள் உள்ளன. ஆனால் அரண்மனை தற்பொழுது மியுசியமாக உள்ளது.அந்த மியுசியத்தில் பல கடல்வாழ் உயிரினங்களின் எச்சங்கள் இருந்தன.
அரசமாளிகை மாளிகையருகே ஒரு மாளிகையுண்டு. குமாரி கார் அல்லது குமாரியின் மனை என்று ஒன்று உள்ளது . இது ஒரு அழகான சித்திர வேலைப்பாடுகள் கொண்ட வீடு. இங்கு ஒரு சிறிய இளவரசியாக வாழ்கிறாள். மூன்றிலிருந்து ஐந்து வயதில் ஒரு பண்டிகை நாளில் நேவாரிய இனத்தின் சாக்கிய பிரிவிலிருந்து ஒரு சிறுமியைத் தேர்ந்தெடுத்து அவளை இளவரசியாகப் பல வருடங்கள் கொண்டாடுவார்கள் . இன்னமும் அந்த பழக்கம் நேவார மக்களிடம் தொடர்கிறது.
இந்தப்பழக்கம் 200 நூற்றாண்டுகள் முன்பாகவே உருவாகியது. இதற்கும் ஒரு தொன்மக் கதையுள்ளது.
ஜயபிரகாஸ் என்ற மல்லா வம்சத்து மன்னனுடன் ஒவ்வொரு இரவும் அந்த நகரின் காவல் தேவதையுடன் தாயம் விளையாடிவந்தாதார் . அவருக்கு ஒரு நாள் அந்த காவல் தெய்வத்தின்மேல் காமம் வந்துவிட்டது . காவல் தேவதை அதன் பின்பு மன்னனிடம் வருவதில்லை .
தவற்றை உணர்ந்த மன்னன் பாவமன்னிப்பாகச் ஒரு சிறுமியை அவள் வயதுக்குவரும் வரையில் இளவரசியாக வணங்குவது ஒரு வழக்கமாகிவிட்டது. மன்னராட்சியற்ற காலத்திலும் இது நடக்கிறது இப்படி11 சிறுமிகள் நாடெங்கும் இருந்த போதிலும் பக்ரபூரில் உள்ள பெண்ணே இராஜகுமாரியாகக் கருதப்படுவாள் .
இந்த குமாரியின் இல்லம் சென்று 15 நிமிடங்கள் அவளைத் தரிசிக்க நாங்களும் நின்றோம் மாடியில் வசிக்கும் அவளை எமது வழிகாட்டி கூக்குரலிட்டு அழைத்தும் பார்த்தான். அந்த ராஜகுமாரி எங்களுக்கு காட்சியளிக்க வரவில்லை . எனக்குப் போர் அடித்தது வெளியே வந்துவிட்டேன் .
இதைவிட மிகவும் வினோதமான ஒரு பண்பாடு இவர்களிடம் உள்ளது, இந்த நேவாரிகளிடம். பெண் குழந்தைகள் வயதுக்கு வருமுன் விளாம்பழத்தை மணப்பார்கள்
ஏன் விளா பழம்?
தடிப்பான கோதுள்ளது. இதேபோல் பலமான கணவன் வரவேண்டுமென நினைக்கிறார்கள் ‘
இரண்டாவது முறையாக சூரியனை மணப்பார்கள்
பருவமடைந்து பெரிய பெண்ணாகியதுமே இளைஞர்களை மணப்பார்கள் . இதனால் இவர்கள் விதவையாகினாலும் அது குறைபாடாகத் தெரிவதில்லை . மீண்டும் திருமணம் செய்ய முடியும். ஒரு விதத்தில் மிகவும் முன்னேற்றமானதும் தற்காலத்துக்குப் பொருத்தமான சடங்காக எனக்குத் தெரிந்தது.
பல இளம் பெண்கள் கல்யாணம் பெண்களாக அலங்கரித்து தாய்மாருடன் வந்தார்கள். புகைப்படத்துக்களை எடுத்தார்கள் நாங்களும் எடுத்தோம் . புகைப்படத்துக்களை எடுத்த பின்பே எனது வழிகாட்டி மூலம் காரணத்தையறிந்தேன்.