பஜனை குழு சென்ற வேன் விபத்து – அறுவர் உயிரிழப்பு

ஒடிசா மாநிலம் கந்த்ர்துடா மற்றும் சமர்பிண்டா கிராமத்தை சேர்ந்த பஜனை குழுவினர் சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு வேனில் சொந்த ஊருக்கு திரும்பிக்கொண்டு இருந்த போது, நேற்று இரவு ஒடிசா சுந்தர்கர் பகுதியில் சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில வேனில் பயணம் செய்த பஜனை குழுவை சேர்ந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததோடு, 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில், அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 2 பேரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இது பற்றி அறிந்ததும் இறந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பலியானவர்கள் குடும்பத்தினருக்கு இழப்பீடு கேட்டு அவர்கள் மறியல் நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *