புங்குடுதீவுப் பிரதேச பாடசாலைகளை மேம்படுத்தலும் மாணவர்கள் கௌரவிப்பும்

புங்குடுதீவுப் பிரதேச பாடசாலைகளை மேம்படுத்தல்  மற்றும்  2023 ஆம் ஆண்டு க.பொ.த. சாதாரண பரீட்சையில் சித்தி அடைந்த மாணவர்களை கௌவிரவிக்கும் நிகழ்வு   எதிர்வரும் (29) ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பிற்பகல் 4 மணிக்கு புங்குடுதீவு சிறீ சுப்புரமணிய மகளிர் வித்தியாலயத்தில்  நடைபெறவுள்ளது.

புங்குடுதீவு பழைய மாணவர் சங்க கனடாக் கிழையின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண பிரதம செயளாளர்  இலட்சுமணன் இளங்கோவன்,   சிறப்பு விருந்தினராக தீவகக் கல்வி வலய கல்வி நிர்வாகம்  பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஆறுமுகம் யோகலிங்கம்  ஆகியோர் கலந்துகொள்வுள்ளனர்.

இந்த நிகழ்வில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு புங்குடுதீவு பழைய மாணவர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button