இலங்கை

அரசாங்கம் வழங்கிய சகல மதுபான அனுமதிப் பத்திரங்கள் இரத்து செய்யப்படும்:சஜித் பிரேமதாச

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள அனைத்து மதுபான விற்பனை அனுமதிப் பத்திரங்களும் ரத்து செய்யப்படும் என எதிர்க்கட்சித தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் உரையாற்றிய போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அனுமதிப் பத்திரம்

தாம் ஜனாதிபதியாக பதவி ஏற்றுக்கொண்டதன் பின்னர் இந்த அனைத்து அனுமதிப் பத்திரங்களும் ரத்தாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் போது ஆளும் கட்சி எதிர்க்கட்சி என்ற பேதம் பார்க்கப்படாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய அரசாங்கம் யார் யாருக்கு மதுபான அனுமதிப் பத்திரங்களை வழங்கியது என்பது பற்றிய தகவல்கள் அம்பலப்படுத்தப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.