உலகம்

வியட்நாமில் ஊழல் குற்றச்சாட்டில் பாராளுமன்ற சபாநாயகர் ராஜினாமா

அண்டை நாடான வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகராக வூங் டின் ஹியூ (வயது 67) இருந்து வருகிறார்.

இவர் மீது அதிகார துஷ்பிரயோகம், ஊழல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இதற்கிடையே அவரது உதவியாளர் பாம் தாய் ஹா ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.

இந்தநிலையில் தற்போது வூங் டின் ஹியூ தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது அங்குள்ள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.