இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர் பலி
சிரியாவின் அலேப்போ மாகாணத்தில் இஸ்ரேல் இன்று நடத்திய வான்வழித் தாக்குதலில் சிரிய சிப்பாய்கள் 36 பேர் உயிரிழந்துள்ளனர் என போர் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஹிஸ்புல்லா இயக்கத்தின் ரொக்கெட் ஆயுதக்களஞ்சியம் ஒன்று அமைக்கப்பட்டுள்ள பகுதிக்கு அருகில் இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக பிரிட்டனைத் தளமாகக் கொண்ட, மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பகம் எனும் அமைப்பு தெரிவித்துள்ளது.
இச்சம்பவத்தில் குறைந்தபட்சம் 36 சிப்பாய்கள் பலியாகினர் எனவும் டசின் கணக்கானோர் காயமடைந்துள்ளனர் எனவும் அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.
தாக்குதல் நடைபெற்ற பகுதியானது அலேப்போ சர்வதேச விமான நிலையத்துக்கு அருகில் அமைந்துள்ளதாகவும் அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.
இதேவேளை, இன்று அதிகாலை இஸ்ரேலிய எதிரி நடத்திய தாக்குதலில் பொதுமக்களும் இராணுவத்தினரும் உயிரிழந்தனர் எனவும் பலர் காயமடைந்துள்ளனர் எனவும் சிரிய இராணுவ வட்டாரமொன்று தெரிவித்துள்ளது.