பள்ளி வளாகத்தில் மாணவர்களுடன் உல்லாசம்: 6 பெண் ஆசிரியர்கள் கைது

பள்ளி வளாகத்திலேயே மாணவர்களுடன் உல்லாசமாக இருந்த ஆறு பெண் ஆசிரியர்கள் கைது செய்யப்பட்ட. சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவில் உள்ள டான்வில்லி என்ற பகுதியில் 38 வயதான பெண் ஆசிரியர் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. இந்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டபோது 16 வயதுள்ள இரண்டு மாணவர்களுடன் அவர் மூன்று முறை உடலுறவு கொண்டதாக குற்றம் காட்டப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்.

அதேபோல் 32 வயதான ஹீடர் கேர் என்ற பெண் ஆசிரியரும் டீன் ஏஜ் மாணவருடன் பாலியல் உறவு இருந்ததாக பத்திரிகை ஒன்று தெரிவித்தது. இதுகுறித்து போலீசார் அந்த பள்ளியில் விசாரணை செய்த போது மாணவர்களுடன் பாலியல் உறவில் இருந்த ஆறு பெண் ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.

மாணவர்களை கட்டாயப்படுத்தி ஆசிரியர்கள் உடலுறவில் ஈடுபட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளதை  அடுத்து அந்த பள்ளி வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றவர்கள் இந்த சம்பவத்தைக் கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button