இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: கடந்த அரசின் தொடர்பு அம்பலமாகிறது – செல்வராசா கஜேந்திரன்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அண்மையில் இடம்பெற்று வரும் தொடர்ச்சியான கைதுகள், கடந்த அரசாங்கத்திற்கு இந்தச் சம்பவத்துடன் தொடர்பிருந்ததை உறுதிப்படுத்துவதாகத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே இவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற போதே அரசாங்கத்திற்குத் தொடர்பிருப்பதாகத் தான் தெரிவித்து இருந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முஸ்லிம் சமூகத்தினர் மீது திட்டமிட்டுப் பழிபோடுவதற்கான சூழல் உருவாக்கப்பட்டதாகச் சுட்டிக்காட்டிய அவர், தொடர்ந்து விசாரணைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button