உலகம்

திருத்தந்தை பதினான்காம் லியோவின் ஆப்பிரிக்கப் பயணம்

திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், ஆப்பிரிக்க நாடுகளுக்கான தனது திருத்தூதுப் பயணத்தை ஏப்ரல் 13-ஆம் திகதி திங்கள்கிழமை தொடங்கினார். வத்திக்கான் செய்தியாளர் இம்மானுவேல் மரியான் இது குறித்த விரிவான தகவல்களை வழங்கியுள்ளார்.

பயணத் திட்டம் மற்றும் வரவேற்பு: உரோமை நேரப்படி 9:00 மணிக்கு ஃபியூமிசினோ சர்வதேச விமான நிலையத்திலிருந்து திருத்தந்தை புறப்பட்டார். அல்ஜீரிய நேரப்படி காலை 10:00 மணிக்கு தலைநகர் அல்ஜியர்ஸில் உள்ள ஹவாரி பூமேடியேன் சர்வதேச விமான நிலையத்தை அவர் வந்தடைந்தார். அங்கு அவருக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

காலை 10:45: மகாம் எச்சாஹித் (ஆயஙயஅ நுஉhயானை) தியாகிகள் நினைவிடத்தைப் பார்வையிட்டுஇ அங்கு வாழ்த்துரை வழங்குகினார்.

காலை 11:15: எல் மௌராடியா (நுட ஆழரசயனயை) ஜனாதிபதி மாளிகையில் அல்ஜீரியக் குடியரசுத் தலைவரை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார்.

நண்பகல் 12:00: ஜமா அல் ஜசீர் மாநாட்டு மையத்தில் அரசு அதிகாரிகள்இ சமூக அமைப்புகள் மற்றும் தூதரக உறுப்பினர்களைச் சந்தித்து உரையாற்றினார்.

பிற்பகல் 03:45: அல்ஜியர்ஸின் பெரிய மசூதியைப் பார்வையிடுகிறார். இது மக்களிடையே நிலவும் ஆன்மீக ஒற்றுமையை வலுப்படுத்தும் நிகழ்வாகக் கருதப்படுகிறது.

மாலை 04:35: பாப் எல் ஓயெத் பகுதியில் அமைந்துள்ள அகுஸ்தினார் மிஷனரி சகோதரிகளின் நட்புறவு மையத்திற்குத் தனிப்பட்ட முறையில் சென்று கலந்துரையாடினார்.

மாலை 05:10: ஆப்பிரிக்கா அன்னை பேராலயத்தில் அல்ஜீரிய மக்களைச் சந்தித்துத் தனது ஆசியுரையை வழங்கினார். .

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *