இலங்கை

நயினாதீவு விகாராதிபதிக்கு புலிகளுடன் நெருக்கிய தொடர்பு!;  கலகம குசலதம்ம தேரர்கூறுகிறார் 

நயினாதீவு (நாகதீப) விகாரையின் விகாராதிபதிக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் நெருக்கிய தொடர்பிருந்திருக்கலாம் என கலகம குசலதம்ம தேரர் தெரிவித்துள்ளார்.

இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

(நாகதீப) விகாராதிபதிக்கு இதுவரை யாழ்ப்பாணம் மக்களால் எதிர்ப்புகள் தெரிவிக்கப்படவில்லை.அப்படியென்றால் அவர் அவர்களின் கொள்கைக்கு இணங்கி போவதாலா என்ற சந்தேகம் எழுகிறது?

யாழ்ப்பாணம் நகரத்தில் இருக்கும் நாகவிகாரையின் விகாராதிபதி விடுதலைப் புலிகளால் சுட்டுக் கொள்ளப்படுகிறார்.ஆனால் நயினாதீவு (நாகதீப) விகாரையின் விகாராதிபதிக்கு ஒன்றும் நடக்கவில்லலை.

அதனால் நாகவிகாரையின் விகாராதிபதி படுகொலைக்கும் நயினாதீவு (நாகதீப) விகாரையின் விகாராதிபதிக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளும் ஒதோ ஒரு விதத்தில் சம்பந்தங்கள் இருந்திருக்கலாம்.

இன்றைய நிலையிலும் திஸ்ஸ விகாரை தனக்கு சொந்தமானது என்கிறார்.விகாரைக்கு உரியது ஒரு ஏக்கர் காணி மட்டுமே என கூறும் அவர் 14 ஏக்க காணி பொது மக்களுக்கு சொந்தமானது என்கிறார்.

இவற்றை உற்று நோக்கினால் பெரும் சந்தேகமும் சர்ச்சைகளும் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *