தனது விந்தணுக்களால் ஒரே நேரத்தில் 20 பெண்களை தாயாக்க விரும்பிய எப்ஸ்டீன்; மற்றுமொரு பகீர் தகவல்

ஒரே நேரத்தில் 20 பெண்கள் பண்ணை வீட்டில், தனது விந்தணுக்களால் பெண்களுக்கு கருவூட்டி அதன்மூலம் ஒரு சூப்பர் இனத்தை உருவாக்க உயிரிழந்த பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீன் திட்டமிட்டதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.
அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், அரச குடும்பத்தினர் மற்றும் பிரபலங்கள் என உலகின் செல்வாக்குமிக்க மனிதர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த ஜெஃப்ரி எப்ஸ்டீன், 2019ஆம் ஆண்டில், சிறுமிகளைக் கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக அமெரிக்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

சிறுமிகளைத் தவறாகப் பயன்படுத்தியதாக குற்றம்
தனது செல்வாக்கையும் பணத்தையும் பயன்படுத்தி சிறுமிகளைத் தவறாகப் பயன்படுத்தியதாக அவர்மீது குற்றம்சாட்டப்பட்டது.
ஆனால், அவர் கைது செய்யப்பட்ட சில வாரங்களிலேயே, நியூயார்க் சிறையில் சடலமாக மீட்கப்பட்டார். இது தற்கொலை என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டாலும், அவரது மரணம் உலகளவில் பல மர்மங்களையும் சர்ச்சைகளையும் கிளப்பியது.
கடந்த பல ஆண்டுகளாக, அமெரிக்க புலனாய்வாளர்கள் எப்ஸ்டீன் தொடர்பான மின்னஞ்சல்கள், தொடர்புப் பட்டியல்கள், விமானப் பயணப் பதிவுகள் மற்றும் சாட்சிகளின் வாக்குமூலங்கள் எனப் பெருமளவிலான தரவுகளைச் சேகரித்தனர்.
இந்த நிலையில் எப்ஸ்டீன், மெக்ஸிகோவின் சாண்டா ஃபே அருகே உள்ள பண்ணை வீட்டில், தனது விந்தணுக்களால் பெண்களுக்கு கருவூட்டி அதன்மூலம் ஒரு சூப்பர் இனத்தை உருவாக்க விரும்புவதாக கூட்டாளிகளிடம் அவர் கூறியதாக நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
இந்த யோசனையை, சிலர் தனிப்பட்ட முறையில் ’குழந்தைப் பண்ணை’ என்று குறிப்பிட்டதாக நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
![]()