உலகம்

சுவிஸ் தமிழர்களின் நகைக்கடைகளில் திடீர் சோதனை; 10 விதி மீறல் கண்டுபிடிப்பு

சுவிஸ்லாந்து சூரிச் நகரில் 14 தங்க வியாபார நிலையங்களில் பொலிஸாரின் திடீர் சோதனையில் 10 வியாபாரிகள் விதிகளை பின்பற்றவில்லை எனக் கண்டறியப்பட்டதுடன் இதில் ஒரு நகைக்கடை தமிழர்கள் சொந்தமானது என பொலிஸார் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

கண்டுபிடிக்கப்பட்ட சட்ட மீறல்கள்
அளவீடு செய்யப்படாத தராசுகள்
ஆவணத் தேவைகளை பூர்த்தி செய்யாமல் செயல்பாடு
விலைமதிப்பற்ற உலோகங்களை வாங்க அனுமதி இல்லாமை

இதனிடையே, தேவையான பொறுப்புக்குறி (Responsibility mark) அல்லது நேர்த்தியின் அறிகுறி இல்லாத ஒரு தொழிற்சாலையில், தோராயமாக 200 கிராம் தங்க நகைகள் கண்டுபிடிக்கப்பட்டது.

பொறுப்புக்குறி என்பது விலைமதிப்பற்ற உலோக கலவைக்குப் பொறுப்பாளரை அடையாளம் காட்டும், தர உறுதியைக் குறிக்கும் சட்டப்பூர்வ குறியீடு ஆகும்.

சர்ச்சைக்குரிய நகைகளை பொலிஸார் கைப்பற்றி, வியாபாரிக்கு எதிராக அரசு வழக்கறிஞர் அலுவலகத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன.

சூரிச் கான்டன் காவல்துறை, தங்கம், நகைகள் மற்றும் பிற மதிப்புமிக்க பொருட்களை அங்கீகரிக்கப்பட்ட மற்றும் நம்பகமான வியாபாரிகளிடம் மட்டுமே விற்பனை செய்ய பரிந்துரைக்கிறது.

மேலும், விலைமதிப்பற்ற உலோகங்களை வாங்கும் டீலர்கள் நிறுவனத்தில் பதிவு செய்யப்பட வேண்டும். என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *