நிகழ்வுகள்
முன்பள்ளி மாணவர்களுக்கு 15 லட்சம் ரூபா பெருமதியான உபகரணங்கள் வழங்கி வைப்பு

நுவரெலியா மாவட்டத்தில் பெரெண்டினா நிறுவனம் மற்றும் வின்சன்ட் பெரர் நிறுவனத்தின் ஏற்பாட்டில் தெரிவு செய்யப்பட்ட தோட்டங்களில் இயங்கும் சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் மற்றும் பிரிடோ நிறுவனத்தினால் இயங்கிவரும் முன்பள்ளிகள் ஆகியவற்றின் மாணவர்களின் கல்வி அபிவிருத்திக்காகவும் அவர்களுடைய அறிவு திறனை மேம்படுத்தும் வகையிலும் சுமார் 15 லட்சத்திற்கு பெறுமதியான விளையாட்டு உபகரணங்கள் மற்றும் கல்வி கற்க கூடிய உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் பெரெண்டினா பிரதி முகாமையாளர் பி. எம். ரஹீம், பெரெண்டினா நிறுவன அதிகாரிகள் , சிறுவர் பராமரிப்பு நிலைய ஆசிரியர்கள் மற்றும் பிரிடோ முன்பள்ளி ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.

![]()