கவிதைகள்

பதித்தவர் தடத்தில் நன்றியொடு பயணிக்கிறேன்!…. கவிதை… பயணம்-2… சங்கர சுப்பிரமணியன்

துயரம்…..உலாவும்..…இடமே
நம் வாழ்வில் மறவா..…துயரம் உலாவும் இடமே
நம் வாழ்வில் மறவா துயரம் உலாவும் இடமே

துயரம் உலாவும் இடமே
நம் வாழ்வில் மறவா துயரம் உலாவும் இடமே
நம் வாழ்வில் மறவா துயரம் உலாவும் இடமே

வயதிலே முதியோரென்றும்
வயதாலே சிறியோர் என்றும் வேறுபாடின்றி
அனைவரும் ஒன்றாய் மடிந்தது எம்மண்
அனைவரும் ஒன்றாய் மடிந்தது எம்மண்
அனைத்துமிழந்து அழிந்ததும் எம்மண்
அனைத்துமிழந்து அழிந்ததும் எம்மண்

ஆதலினால் இதுதான்
நம் வாழ்வில் மறவா துயரம் உலாவும் இடமே
நம் வாழ்வில் மறவா துயரம் உலாவும் இடமே

கற்பிழந்தோரென்றே பொட்டிழந்தோரென்றே
கற்பிழந்தோரென்றே பொட்டிழந்தோரென்றே
கதறியழுதே கண்ணீர் வடித்தோர் என்றே
கதறியழுதே கண்ணீர் வடித்தோர் என்றே
எல்லோரும் ஒன்றாய் மடிந்தனர் இங்கே
எல்லோரும் ஒன்றாய் மடிந்தனர் இங்கே

ஆகையினால் இதுதான்
நம் வாழ்வில் மறவா துயரம் உலாவும்இடமே
நம் வாழ்வில் மறவா துயரம் உலாவும் இடமே

போரிட்ட தலைவன் உயிர்நீத்த போராளி
ஆஆஅ…ஆஆஅ……ஆஆஆஅ…ஆஆஆஅ
போரிட்ட தலைவன் உயிர்நீத்த போராளி
மண்ணிலே தம்மை விதைத்த மாபெரும் வீரர்
மண்ணிலே தம்மை விதைத்த மாபெரும் வீரர்
எல்லோரும் ஒன்றாயிங்கு துயில்வதனாலே
எல்லோரும் ஒன்றாயிங்கு துயில்வதனாலே

வாழ்வினிலே இதுதான்

நம் வாழ்வில் மறவா துயரம் உலாவும் இடமே
நம் வாழ்வில் மறவா துயரம் உலாவும் இடமே

துயரம் உலாவும் இடமே
நம் வாழ்வில் மறவா துயரம் உலாவும் இடமே
நம் வாழ்வில் மறவா துயரம் உலாவும் இடமே

சங்கர சுப்பிரமணியன்

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *