கவிதைகள்

பதித்தவன் தடத்தில் பயணிக்கிறேன்!… கவிதை… சங்கர சுப்பிரமணியன்

காதலி… காதலி…
என் உயிர்க் காதலி
என் காதலி…என் காதலி

உன்னை நான் கண்டதும்
என்னை நீ வென்றாயே
நீ…வென்றாயே…என் காதலி

மண்ணில் நடக்கிறேன்
காலாய் இருக்கிறாய்
நீ காலாய் இருக்கிறாய்

விண்ணில் பறக்கிறேன்
நீ சிறகாய் இருக்கிறாய்
சிறகாய் இருக்கிறாய்

மண்ணில் நடக்கிறேன்
காலாய் இருக்கிறாய்
நீ காலாய் இருக்கிறாய்

விண்ணில் பறக்கிறேன்
நீ சிறகாய் இருக்கிறாய்
சிறகாய் இருக்கிறாய்

மண்ணில் நானும் நடந்தாலும்
விண்ணில் நானே பறந்தாலும்
நீ காலாய் இருந்து சிறகாய் இருந்தும்
என்னில் துணையாய் வருகின்றாய்
நீ என்னில் துணையாய் வருகின்றாய்

காதலி… காதலி…
என் உயிர்க் காதலி
என் காதலி…என் காதலி

வாழும் வாழ்விலே
வறுமை வந்தாலும்
கொடும் வறுமை வந்தாலும்

நாளை வாழ்வினை
காலன் பிரித்தாலும்
அந்தக் காலன் பிரித்தாலும்

வறுமையில் உன்னோடு வாடிடுவேன்
பிரிவிலும் உன்னுடன் வந்திடுவேன்
வறுமை என்ன பிரிவும் என்ன
எதுவும் நம்மைப் பிரிக்காதே
என்றும் நம்மைப் பிரிக்காதே

காதலி… காதலி…
என் உயிர்க் காதலி
என் காதலி…என் காதலி

உன்னை நான் கண்டதும்
என்னை நீ வென்றாயே
நீ…வென்றாயே…என் காதலி

சங்கர சுப்பிரமணியன்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *