கவிதைகள்

வளர்ப்புப்பூணை… கவிதை… முல்லைஅமுதன்

மடியில் இருந்த வளர்ப்புப்பூணை
இறங்கிச் செல்கையில்முடி உதிர்த்துச்சென்றது.
வேட்டியை சரிசெய்தபோதுதான்
பரிசுடன் வந்தாள்.

பிரித்துப்பார்த்தேன்.
அழகியதாய் புத்தர் சிலை..

அன்று கனவில் கூராயுதத்துடன்
வந்துசெல்பவன்
கையிலிருப்பதில் அதன் வடிவம் இல்லை..

புத்தன் ஏன் அடிக்கடி மாறிப்போகிறான்?
பெயர்த்தியைக் கொன்றது
சித்தார்த்தனா?புத்தனா?

மகளின் பார்வையிலும்
எனக்கான பதில் இல்லாமலிருந்தது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *