கவிதைகள்

சொர்க்கத்தின் சூட்சுமம்!…. கவிதை… சங்கர சுப்பிரமணியன்

மாயவரம் மந்திர மூர்த்தி அடிகளார்
மார்கழி மாதம் மறைந்தார் என்றனர்
மனம் மகிழ்ந்து போனேன்- ஆனால்
அம்மாதம் மறைந்தவர் அனைவருமே
சொர்க்கம் செல்வார்கள் என்றனர்

வைகுண்ட ஏகாதேசியாம் அந்நாளில்
சொர்க்கவாசல் நுழைந்தால் – சொர்க்கம்
உண்டென்றதால் ஒருமுறை சென்றேன்
ஆண்டுதோறும் புதிப்பிக்க வேண்டுமாம்

பகவானை தரிசித்து வந்தால் – அவனின்
பாதமடையலாம் என்று சொன்னார்கள்
கால்கடுக்க மலையேறி நான் வணங்கினேன்
தொங்கூர்தியில் வந்தவனும் அங்கு நின்றான்

போனபிறவி செய்த பாவத்தால் நீ நடந்தாய்
செய்த புண்ணியம் தொங்கூர்தியாய் சுமந்தது
வத்தலக்குண்டு வரதனார் இப்படி சொன்னார்
யாதொன்றும் யான் அறிந்திலனே பராபரமே!

சங்கர சுப்பிரமணியன்

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *