உலகம்

சீனாவில் கனடா– சீனா எரிசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம்

பல ஆண்டுகளாக நீடித்த கடினமான இருதரப்பு உறவுகளுக்குப் பிறகு, கனடா மற்றும் சீனா இடையே எரிசக்தி துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் புதிய ஒப்பந்தம் கையெழுத்தானது.

பீஜிங்கில் வியாழக்கிழமை தொடங்கிய உயர்மட்ட பேச்சுவார்த்தைகளின் முதல் நாளில், கனடா பிரதமர் மார்க் கார்னி முன்னிலையில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் (MOU) கையெழுத்திடப்பட்டது.

சுத்தமான எரிசக்தி மற்றும் பாரம்பரிய எரிசக்தி துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவதற்கான வழிமுறைகளே இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கமாகும்.

இருப்பினும், தற்போது நடைமுறையில் உள்ள சுங்கவரிகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு இந்த ஒப்பந்தத்தில் எந்தத் தீர்வும் இடம்பெறவில்லை

கனடாவின் எரிசக்தி மற்றும் இயற்கை வளங்கள் அமைச்சர் டிம் ஹாட்சன் சீன அதிகாரிகளுடன் கையெழுத்திட்ட இந்த ஒப்பந்தத்தில், சீனா கனடாவிலிருந்து அதிக அளவில் பெட்ரோலியம் அல்லது திரவ இயற்கை எரிவாயு (LNG) வாங்க உறுதியளிக்கவில்லை.

அதே நேரத்தில், எண்ணெய் மற்றும் எரிவாயு வள மேம்பாடு, திரவ இயற்கை எரிவாயு மற்றும் திரவ பெட்ரோலிய எரிவாயு (LPG), வெளியீடு குறைப்பு உள்ளிட்ட பல துறைகளில் அமைச்சர்மட்ட உரையாடல்களை வலுப்படுத்த இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.

இந்த ஒப்பந்தம், ஏற்கனவே இருந்த உடன்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டதாகவும், சுமார் ஒரு தசாப்தத்திற்குப் பிறகு கனடா–சீனா இடையே அமைச்சர்மட்ட எரிசக்தி பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கியுள்ளதற்கான அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது.

ஆனால், கனடா எரிசக்தி ஏற்றுமதிக்கான புதிய உறுதிமொழிகள் இதில் இடம்பெறவில்லை.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *