இலங்கை

மீண்டும் களத்தில் இறங்கிய மகிந்த – கொழும்பில் புதிய வீட்டில் குடியேறினார்

முன்னாள் ஜனாதிபதிகள் வசித்துவந்த அனைத்து உத்தியோகபூர்வ இல்லங்களையும் மீட்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்ததைத் தொடர்ந்து, தங்காலையில் உள்ள கார்ல்டன் இல்லத்தில் வசித்து வந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மீண்டும் கொழும்புக்குத் திரும்பியுள்ளதாக தெரியவருகிறது.

கடந்த வாரம் முதல் கொழும்பு நுகேகொட பகுதியில் உள்ள ஒரு வீட்டில் குடியேறியுள்ளார்.

தங்காலை கார்ல்டன் இல்லத்துக்குச் சென்றதைத் தொடர்ந்து அரசியல் நடவடிக்கைகளில் இருந்து தற்காலிகமாக விலகியிருந்த, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, கொழும்புக்குத் திரும்பியுள்ளதால் மீண்டும் தமது அரசியல் செயல்பாடுகளை ஆரம்பிக்க உள்ளதாகவும் தெரியவருகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *