உலகம்

சரேயில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த கைதியின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு

பலஸ்தீன நடவடிக்கைக் குழுவுடன் தொடர்புடைய குற்றங்களுக்காக சரேயில் (Surrey) தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட கைதி 50 நாட்களுக்கும் மேலாக மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டத்தை நிறைவு செய்துள்ளார்.

மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர், ஏனைய மூன்று கைதிகளுடன் இணைந்து அவர் போராட்டத்தை நிறைவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் உண்ணாவிரதப் போராட்டங்கள் புதிய பிரச்சினை அல்ல என தெரிவித்த சிறைச்சாலைகள் மற்றும் கைதிகளின் பாதுகாப்புக்கான துணை அமைச்சர் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஆண்டுக்கு சராசரியாக 200 க்கும் மேற்பட்ட போராட்டங்கள் இடம்பெற்றதையும் சுட்டிக்காட்டினார்.

கைதிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய நீண்டகால நடைமுறைகள் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *