இலங்கை

நாமலின் வருகைக்கு எதிர்ப்பு கூச்சலிட்டதால் குழப்பநிலை; இளைஞர்களைத் திசை திருப்ப முயற்சி 

சீரற்ற காலநிலை காரணமாக மக்களின் சுக துக்கங்களை விசாரிப்பதற்கும், அபிவிருத்தி பணிகளை பார்வையிடுவதற்கும் சென்ற பாராளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளருமான நாமல் ராஜபக்ஷ நேற்று புதன்கிழமை மாத்தளை மாவட்டத்திற்கு விஜயம் செய்த நிலையில் உடகம பகுதியில் மக்கள் இவர்களின் வருகைக்கு கூச்சலிட்டு எதிர்ப்பு தெரிவித்தமையினால் அமைதியின்மை ஏற்பட்டது.

நாமல் ராஜபக்ஷ லக்கல, இறத்தோட்டை, மாத்தளை மற்றும் நாவுல பகுதிகளுக்கு விஜயங்களை மேற்கொண்டிருந்தார். இதன் போது லக்கல பிரதேசத்தின் நாவுல பிரதேச செயலாளருக்குட்பட்ட ஆந்தாவளை, இரஜமனை பகுதியில் வெள்ளத்தினால் அடித்துச் செல்லப்பட்ட பாலத்தினை பார்வையிடுவதற்கு சென்று அப்பிரதேசத்தில் ஆந்தாவளை வித்தியாலயத்தின் இடைதங்கல் முகாமினை பார்வையிட்டு, பின்பு உடகம பூர்வாராம விகாரையின் இடைத்தங்கல் முகாமினை பார்வையிடச் சென்ற போது அங்கிருந்த மக்கள் இவர்களின் வருகைக்கு கூச்சலிட்டு எதிர்ப்பு தெரிவித்தமையினால் அமைதியின்மையும் குழப்ப நிலையும் ஏற்பட்டது.

இதன்போது இளைஞன் ஒருவர் குரலை உயர்த்தி, இவர்களின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தார். நாமல் ராஜபக்ஷ அந்த இளைஞனை தனியாக அழைத்துச் சென்று, புதிய வீட்டிற்குச் செல்லத் தயாரா என்றும், அவ்வாறு செய்வதற்கு ஏதேனும் ஆட்சேபனைகள் உள்ளதா என்றும் கேட்டார்.

மற்றவர்கள் சொல்வதைக் கேட்பதன் முக்கியத்துவத்தைப் பற்றி அந்த இளைஞனுக்கு அறிவுறுத்தினார், மேலும் பேரழிவிற்குப் பிறகு குடியிருப்பாளர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை அவர் அறிந்திருப்பதாகவும் கூறினார்.

ராஜபக்சே எம்.பி.யைச் சுற்றியிருந்த அவரது ஆதரவாளர்கள்,அங்கிருந்த இளைஞர்களைத் திசைதிருப்ப முயன்ற போதிலும், நாமல் ராஜபக்ச தலையிட்டு நிலைமை மோசமடைவதைத் தடுத்தார். இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு சிறந்த எதிர்காலத்தை உறுதி செய்ய கூட்டு நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *