இலங்கை

மாகாண சபைத் தேர்தல்; அரசியல் தீர்வு விடயத்தில் சேர்ந்து செயற்பட முடிவு

மாகாண சபைத் தேர்தல், அரசியல் தீர்வு உள்ளிட்ட விடயங்களில் இரு தரப்பினரும் தனியாக மேற்கொள்ளும் விடயங்களை சேர்ந்து செய்வதற்கான முன்னெடுப்புகளை மேற்கொள்ளவுள்ளோம் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இலங்கை தமிழ் அரசுக் கட்சி மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி இடையிலான சந்திப்புக்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது சுமந்திரன் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

தற்போதைய சூழலில் தமிழ் மக்கள் எதிர்கொள்கின்ற சவால்களை எப்படி நாங்கள் முகம் கொடுப்பது, முக்கியமான விடயங்களில் இணைந்து செயல்படுவது பற்றி நீண்ட கலந்துரையாடலொன்றை நாம் நடத்தினோம். இதன்போது இரண்டு முக்கிய விடயங்களை பேசினோம்.

முதலாவது, மாகாண சபை தேர்தல்கள் நடத்தப்படாமல் பிற்போடப்படும் சூழ்நிலையில் அதிகாரப் பகிர்வை கோரும் நாங்கள் அதனை தவிர்த்துக் கொண்டு செல்ல முடியாது. மிக விரைவில் மாகாணங்களுக்கு மாகாணங்களால் தெரிவு செய்யப்படும் மக்கள் பிரதிநிதிகளுக்கு அரசியல் அதிகாரம் கையிலே போய் சேர வேண்டும். அதற்காக மாகாண சபைத் தேர்தல்கள் விரைவாக நடத்தப்பட வேண்டும் என்ற அழுத்தத்தை நாங்கள் சேர்ந்து மேற்கொள்வதெனத் தீர்மானமாக எடுத்திருப்பதுடன் இரு தரப்பினரும் மேற்கொள்ளும் விடயங்களை சேர்ந்து செய்வதற்கான முன்னெடுப்புகளை மேற்கொள்ளவுள்ளோம்

தமிழ் மக்களுக்கான நீதியான நியாயமான அரசியல் தீவு சம்பந்தமாக நாங்கள் ஏற்கனவே சேர்ந்த தரப்புகள் என்ற ரீதியிலும் பழைய சரித்திர விடயங்களை பலவற்றை அடைந்திருக்கிறோம். இது தொடர்பாக ஒருமித்த நிலைப்பாட்டை வெளிக்கொண்டு வருவதற்கான தொடர்ச்சியான சந்திப்புகளை நடத்துவதாக தீர்மானித்திருக்கிறோம் – என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *