இலங்கை

அனர்த்தங்களில் பலியானோர் எண்ணிக்கை 366 ஆக உயர்வு

நாட்டில் நிலவும் அதிதீவிர வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 366 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், 367 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அனர்த்த முகாமைத்துவ நிலையம் இன்று (01) மாலை​ 5 மணிக்கு வௌியிடப்பட்டுள்ள தகவலில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 1,564 பாதுகாப்பு தங்குமிடங்களில், 61,612 குடும்பங்களைச் சேர்ந்த 218,526 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *