உலகம்

வெனிசுலாவோடு அதிகரிக்கும் மோதல் – விமான நிறுவனங்களை எச்சரித்த ட்ரம்ப்!

வெனிசுலாவுடனான பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்க விமான நிறுவனங்களுக்கு ட்ரம்ப் புதிய கட்டளையை பிறப்பித்துள்ளார்.

அதன்படி வெனிசுலா வான்வெளியை முழுவதுமாக மூடுவது குறித்து பரிசீலிக்குமாறு விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

பாதுகாப்பு மோசமடைந்து வருவதாலும், இராணுவ நடவடிக்கைகள் அதிகரிப்பதாலும், வெனிசுலா மீது பறக்கும்போது எச்சரிக்கையாக இருக்குமாறு அமெரிக்க பெடரல் விமான நிர்வாகம் (FAA) விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியிருந்த நிலையில் ட்ரம்பின் இந்த
அறிவிப்பு வந்துள்ளது.

போதைப்பொருள் பயங்கரவாதிகளை” எதிர்த்துப் போராடவும், வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை அதிகாரத்திலிருந்து அகற்றவும், அமெரிக்க அரசாங்கம் இப்பகுதியில் தனது இராணுவ இருப்பை அதிகரித்து
வருகிறது.

நிக்கோலஸ் மதுரோவை கைது செய்ய அல்லது தண்டனை வழங்க வழிவகுக்கும்
தகவல்களை வழங்குவோருக்கு $50 மில்லியன் வெகுமதியை வழங்கவுள்ளதாகவும் ட்ரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது.

ட்ரம்பின் சமீபத்திய அறிவிப்புகள் வெனிசுலாமீது முழு அளிவிலான மோதலுக்கு அமெரமிக்கா தயாராகி வருவதை காட்டுவதாக அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *