இலங்கை

யுத்தத்தில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்துவது ஜனநாயக உரிமை

யுத்தத்தில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்துவது அவர்களின் ஜனநாயக உரிமை என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

கிளிநொச்சியில் நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில்,

அரசாங்கம் வர முன்பே மக்கள் இறந்தவர்களை நினைவு கூர்ந்தனர். அது அவர்களின் ஜனநாயக உரிமையாகவே காணப்பட்டது.

எமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் ஆகின்றது.இறந்த தங்களுடைய உறவினர்களை சுதந்திரமாக நினைவு கூர முடியும். பாதுகாப்பு படையினரும் அதற்கு தடையாக இருக்க மாட்டார்கள் என தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *