உலகம்

இங்கிலாந்தின் வேக ஜெட் விமானத் திட்டம் குறித்த பாராளுமன்ற உறுப்பினர்களின் மோசமான அறிக்கை!

இங்கிலாந்தில் பணப் பற்றாக்குறை காரணமாக, இங்கிலாந்தின் பல பில்லியன் பவுண்டுகள் கொண்ட F-35 வேக ஜெட் விமான திட்டத்தில் மீண்டும் தாமதங்கள் ஏற்படுவது செலவுகளை அதிகரித்துள்ளதாகவும் அது விமானத்தின் சண்டையிடும் திறனைப் பாதித்துள்ளது எனவும் இங்கிலாந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளனர்.

விமானிகள் மற்றும் பொறியாளர்களின் “ஏற்றுக்கொள்ள முடியாத” பற்றாக்குறை, விமானங்களின் போக்குவரத்துக்களில் எவ்வாறு சிக்கலை அதிகரிக்கிறது என்று பொதுக் கணக்குக் குழு வெளிப்படுத்தியுள்ளது.

இதேவேளை, 138 F-35 ஜெட் விமானங்களில் 37 மட்டுமே இங்கிலாந்தில் சேவையில் உள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அணு ஆயுதங்களை எடுத்துச் செல்லக்கூடிய விமானத்தின் ஒரு மாறுபாட்டை இங்கிலாந்து கொள்வனவு செய்யும் என கடந்த ஜூன் மாதம் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அவரின் இந்த அறிவிப்பு குறித்தும் தற்போது அந்த அறிக்கை கேள்விகளை எழுப்பியுள்ளது.

இந்தத் திறன் எப்போது செயல்படும் என்பதற்கான காலக்கெடு அல்லது கூடுதல் விலைக் குறியின் மதிப்பீடு எதுவும் பிரதமரின் அறிவிப்பில் இல்லை என்றும் அந்த அறிக்கையில் கூறியது.

இங்கிலாந்தின் புதிய இராணுவத் தலைவரான ஏர் சீஃப் மார்ஷல் சர் ரிச்சர்ட் நைட்டனுக்கு இந்தக் கடுமையான விமர்சனம் வருத்தத்தை கொடுக்கலாம் இருப்பினும் இதுவே உண்மை எனவும் அறிக்கை தெரிவிக்கிறது.

இதேவேளை, இங்கிலாந்து பாதுகாப்பு வரவு செலவுத் திட்டங்களில் தொடர்ச்சியான சுருக்கம், இராணுவத் தலைவர்கள் F-35 கொள்முதலை மெதுவாக்கும் மற்றும் குறுகிய காலத்தில் பணத்தை மிச்சப்படுத்த கொள்முதல் முன்பதிவை மீறும் ஒரு பழக்கத்தை வளர்த்துக் கொண்டதாகவும் இதனால் விமான கொள்வனவு திட்டம் தாமதமடைவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *