பலதும் பத்தும்

தொலைபேசி பார்த்து பொலிஸ் அதிர்ச்சி!

பெங்களூரு மெட்ரோவில் பெண்களை ரகசியமாக வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் ‘மெட்ரோ சிக்ஸ்’ என்ற பெயரில் பதிவேற்றம் செய்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பெங்களூரு மெட்ரோவில் பெண்களை ரகசியமாக வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்த நபரை பொலிஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் மெட்ரோ ரயில்கள் இயங்கி வருகின்றன. இந்த மெட்ரோ ரயில்களில் பயணிக்கும் பெண் பயணிகளை பெண் பயணிகளை ஆபாசமாக வீடியோ, புகைப்படம் எடுத்து மெட்ரோ சிக்ஸ் என்ற பெயரில் இன்ஸ்டாகிராம் கணக்கில் பெண் பயணிகளின் வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டன.

இதுகுறித்து தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்த பனசங்கரி பொலிஸார்,

தொழில்நுட்ப தகவல்களின் அடிப்படையில் பீன்யா அருகே குற்றவாளியைக் கைது செய்தனர்.

திகாந்த் முருகேஷ்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கணக்காளராக பணிபுரிந்து வந்தார். பீன்யாவின் திகளரபாளையத்தில் வசித்து வந்த இவர், தினமும் வேலைக்குச் செல்ல மெட்ரோ சேவையைப் பயன்படுத்தி வந்துள்ளார். அந்த பயணத்தின்போது பெண் பயணிகளின் அசைவுகளை தனது செல்போனில் பதிவு செய்து, இன்ஸ்டாகிராமில் ‘மெட்ரோ சிக்ஸ்’ என்ற பெயரில் ஒரு கணக்கைத் தொடங்கி 13 வீடியோக்களை பதிவேற்றம் செய்தார்.

இந்தக் கணக்கிற்கு 5,690 பாலோவர்கள் இருந்தனர். இந்த வீடியோக்களுக்கு எதிராக பொதுமக்கள் கடும் அதிருப்தியை தெரிவித்தனர். இதையடுத்து பனசங்கரி பொலிஸார், உடனடியாக தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். இன்ஸ்டாகிராம் கணக்கைத் தொடங்கப் பயன்படுத்திய மொபைல் எண்ணின் அடிப்படையில் குற்றவாளியைக் கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

குற்றவாளி திகாந்தின் செல்போனில் மேலும் பல வீடியோக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தனது தொலைபேஅனைத்து வீடியோக்களையும் பதிவு செய்துள்ளார். அவற்றில் 13 வீடியோக்களை மட்டுமே இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்துள்ளார். கைது செய்யப்பட்ட பிறகு குற்றவாளியின் தொலைபேசியில் பறிமுதல் செய்து தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button