இலக்கியச்சோலை
சூழலியல் பேராசான் K.S.குகதாசன் 20 வது வருட நினைவு மலர்!

தாவரவியல் கல்வியறிவு தந்து தமிழுக்கு ஒரு ஆபரணமாக விளங்கிய கல்விமான் குகதாசன்.
சாவகச்சேரி இந்துக் கல்லூரியிலும் பின்னர் யாழ் இந்துக் கல்லூரியில் 1990- 1992 போர்க் காலத்தில் அதிபராக இருந்த அமரர் K.S.குகதாசன் அவர்களின் இருபதாவது வருட நினைவாக நூல் ஒன்றை வெளியிட திட்டமிட்டுள்ளோம்.
உயிரியல் கல்வி ஆசானாகிய விளங்கிய K.S.குகதாசன் அவர்களின்
சூழலியல் பங்களிப்பை பற்றிய தங்களின் ஆக்கங்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.
பேராசானின் இருபதாவது வருட நினைவாக இந்த நூல் வெளிவர உள்ளது.
அத்துடன் தமிழர் தாயகத்தில் சூழலியல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஆக்கப்பூர்வமான கட்டுரைகளையும் இந்நூலில் அணிசேர்க்கலாம் என்று நம்புகிறோம்.
உங்களது கட்டுரைகளை எதிர்வரும் ஜூன் 30ம் திகதிக்கு முன்பாக அனுப்பி வைக்க வேண்டுகிறோம்.
தொடர்புகளுக்கு: ஐங்கரன் விக்கினேஸ்வரா,தொடர்பு இலக்கம்:
+ 61413459842, மின்னஞ்சல் : wankaran@yahoo.com
![]()