உலகம்

ஈரானின் அணு ஆயுதம் குறித்து ஐ.நா. எச்சரிக்கை!

ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்கும் அபாயகரமான நிலையில் உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பின் தலைவர் ரஃபேல் க்ரோஸி (Rafael Grossi) எச்சரித்துள்ளார்.

நாட்டின் சர்ச்சைக்குரிய அணுசக்தி திட்டம் குறித்து ஈரானிய அதிகாரிகளுடன் முக்கியமான விவாதங்களுக்காக அவர் தெஹ்ரானுக்கு புறப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு இந்த அறிக்கை வந்துள்ளது.

பிரான்ஸ் செய்திச் சேவையான லு மொண்டேவிடம் பேசும் போது க்ரோஸி இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

2018 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கீழ் அமெரிக்கா விலகியதைத் தொடர்ந்து, ஈரானின் அணுசக்தி நடவடிக்கைகள் மற்றும் 2015 அணுசக்தி ஒப்பந்தத்துடன் அதன் இணக்கத்தை கண்காணிக்கும் பணியை சர்வதேச அணுசக்தி கண்காணிப்பு (IAEA) தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

அதன் பின்னர், ஈரான் அதன் யுரேனியம் செறிவூட்டல் நடவடிக்கைகளை கணிசமாக அதிகரித்துள்ளது.

வொஷிங்டனின் உறுதியான நிலைப்பாடு இருந்தபோதிலும், ஈரான் தனது திட்டம் முற்றிலும் சிவிலியன் என்று நிலைநிறுத்துகிறது.

இந்த நிலையில் ஈரானும் அமெரிக்காவும் சனிக்கிழமை (19) திட்டமிடப்பட்ட இரண்டாவது சுற்று நேரடிப் பேச்சுவார்த்தைக்குத் தயாராகி வரும் நிலையில், க்ரோசியின் வருகை அதிகரித்த இராஜதந்திர நடவடிக்கைகளுடன் ஒத்துப்போகிறது.

ஓமானில் நடைபெற்ற முதல் சந்திப்பை இரு தரப்பினரும் “ஆக்கபூர்வமானது” என்று வர்ணித்தனர்.

இருப்பினும் தெஹ்ரான் ரஷ்யாவுடன் ஆலோசனை நடத்துவதற்காக மொஸ்கோவிற்கு ஒரு குழுவை அனுப்பியுள்ளது.

இதற்கிடையில், அமெரிக்காவுடனான வரவிருக்கும் சுற்று அணு ஆயுதப் பேச்சுவார்த்தைகள் இந்த வார இறுதியில் ரோமில் நடைபெறும் என்பதை ஈரான் உறுதிப்படுத்தியுள்ளது.

இது பேச்சுவார்த்தை நடைபெறும் இடம் குறித்த முந்தைய நிச்சயமற்ற தன்மையை நீக்குகிறது.

ஈரானின் அணுசக்தி முன்னேற்றம் ஆயுதமயமாக்கலில் குறுக்கிடாமல் இருப்பதை உறுதி செய்வதற்கான தொழில்நுட்ப பாதுகாப்புகள் மற்றும் சரிபார்ப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்தப்படும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *