உலகம்

300 நோயாளிகள் மீது பாலியல் வன்கொடுமை: பிரான்ஸ் மருத்துவர் வாக்குமூலம்!

மேலும் குறித்த மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்த 300 பேரில் பெரும்பாலானோர் குழந்தைகள் என்பது தெரியவந்துள்ளதுடன்  இவ்வழக்கு தொடர்பான ஆவணங்களும் நேற்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை  தான் மிகவும், அறுவறுக்கத்தக்க செயல்களை செய்துள்ளதாகவும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராகத் தான் மிக மோசமான குற்றச்செயலில் ஈடுபட்டிருப்பதாகவும், அவர்கள் அடைந்த காயங்களை ஆற்ற முடியாது என்று ஒப்புக்கொள்வதாகவும் குறித்த மருத்துவர் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் இவரது குற்றம் நிரூபிக்கப்பட்டால், 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

யார் இந்த ஜோல் லே?

கடந்த 2017ஆம் ஆண்டு ஜோல் லே மீது, அண்டை வீட்டைச் சேர்ந்த 6 வயது சிறுமி, தன்னை பாலியல் ரீதியாக சீண்டியதாகக் கொடுத்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து பொலிஸார் அவரது வீட்டை சோதனை நடத்தினர்.

அப்போது, அவரது வீட்டிலிருந்து 3,00,000 புகைப்படங்களும் 650 மோசமான விடியோக்களும், அவர் செய்த பாலியல் துன்புறுத்தல்களைப் பற்றி மருத்துவர் கைப்பட எழுதி வைத்திருந்த நோட்டுப் புத்தகங்களும் பொலிஸாருக்கு  அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து 4 குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்குகளில் 2020ஆம் ஆண்டு குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட மருத்துவருக்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையின்போதுதான், மருத்துவர் தன்னிடம் சிகிச்சைக்காக வருபவர்களுக்கு பெரும்பாலும் குழந்தைகளுக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் துன்புறுத்தல் செய்ததை ஒப்புக் கொண்டார்.

மருத்துவர் அளித்த தகவல் மற்றும் கிடைத்த விடியோ, புகைப்படங்களின் அடிப்படையில், அவர் 158 ஆண்கள், ஏராளமான குழந்தைகள் 141 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தது உறுதி செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை தற்போது நீதிமன்றத்தில் தொடங்கியுள்ள நிலையில் உலகளவில் குறித்த வழங்கு பெரும் பேசு பொருளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *