தன்னை இந்தியாவின் ஆள்போல் காட்டுவதற்கு ரணிலை இந்தியா எச்சரிக்கிறதா?

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவு வழங்குவதாக அவரால் முன்னெடுக்கப்படும் பிரசாரங்களை உடனடியாக நிறுத்த வேண்டுமென்ற எச்சரிக்கையை அதிகாரப்பூர்வமற்ற முறையில் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதானி விவகாரத்தில் அரசாங்கத்திற்கும் இந்தியாவிற்கும் இடையே கடுமையான நெருக்கடி ஏற்பட்டுள்ளதை சாதகமாக பயன்படுத்தி ஓமானில் இடம்பெற்ற கடல்சார் பாதுகாப்பு குறித்த இந்திய மாநாட்டில் பங்கேற்ற முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்தியா தன்னுடன் இருப்பதாக காட்டுவதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி விஜித ஹேரத் கலந்து கொண்டாலும் அவருடனும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருடனும் புகைப்படத்தில் தோன்றி சர்ச்சையை உருவாக்க தீர்மானித்தாலும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அறிவுறுத்தலின் பேரில் விஜித ஹேரத் அதனை தவிர்த்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.
ஓமான் விஜயத்துக்குப் பின்னர் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ளும் மாநாட்டில் தானும் கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடுகளை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கொண்டுள்ளதாகவும் இந்தியா இன்னும் அவரை ஏற்றுக் கொண்டுள்ளது என்பதை காட்டுவதற்கே இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறான விடயங்களை அவதானித்துள்ள இந்தியா, ரணில் விக்ரமசிங்கவின் ஓமான் விஜயத்தின் போது இந்தியத் தரப்பில் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்தியா ஒரு குறிப்பிட்ட கட்சி மூலம் ரணிலுக்கு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளதாகக் கூறுகின்றன. இந்தியா அந்த நாட்டோடு இருப்பதாகக் காட்டுவதற்கு எதிராகவும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது நெறிமுறையற்ற நடத்தை என்றும் அவர் உடனடியாக இந்தச் செயலை நிறுத்த வேண்டும் என்றும் இந்தியா அதிகாரப்பூர்வமற்ற முறையில் ரணிலுக்குத் தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையின் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்ட பின்னரும் பிரதமர் மோடியை இலங்கைக்கு அழைத்த போதும், இந்திய அரசாங்கம் பின்பற்றிய இராஜதந்திர நடவடிக்கைகள் ரணில் விக்ரமசிங்கவுக்கான தனது ஆதரவை வழங்கவில்லை என்பதையே வெளிப்படுத்தியது.
எனினும் தற்போதைய ஜனாதிபதி அநுரகுமாரவின் அரசாங்கத்துக்கும் இந்திய அரசாங்கத்துக்கும் அதானி திட்டத்தால் ஏற்பட்டுள்ள சர்ச்சையை பயன்படுத்தி ரணில் விக்ரமசிங்க இந்த விவகாரத்தை கையாள்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
![]()