இலங்கை

யாழ்ப்பாணம் இந்து கல்லூரிக்கு பிரதமர் விஜயம்

பிரதமர் ஹரிணி அமரசூரிய யாழ்ப்பாணம் இந்து கல்லூரிக்கு விஜயம் மேற்கொண்டார்.

அதிபர் மற்றும் மாணவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட பிரதமர் கல்லூரி அருங்காட்சியகம் மற்றும் மாணவர்களின் இணைப்பாட விதான செயற்பாடுகளையும் பார்வையிட்டார்.

இதன்போது கல்லூரி மண்டபத்தில் பிரதமர் உரையாற்றியதுடன் பிரதமருக்கு பாடசாலை அதிபரால் நினைவுப் பரிசொன்றும் வழங்கி வைக்கப்பட்டது.

இதன்போது கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினர்களான கருணைநாதன் இளங்குமரன், ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி, பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

யாழ்ப்பாண மாவட்டத்திற்கு வருகை தந்த பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று பல்வேறு நிகழ்வுகளிலும் பொதுமக்கள் சந்திப்புக்களிலும் பங்கேற்கிறார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *