இலங்கை

யோஷிதவின் பாட்டிக்கு பயணத் தடை!

யோஷித ராஜபக்சவின் பாட்டி டெய்சி பாரஸ்டிற்கு (Daisy Forrest) கடுவலை நீதிவான் நீதிமன்றம் பயணத்தடை விதித்துள்ளது.

பணமோசடி வழக்கு மற்றும் 59 மில்லியன் ரூபாய் கூட்டுக் கணக்கு தொடர்பான விசாரணைகளை அடிப்படையாகக் கொண்டே இந்தப் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டு முதல் விசாரணையில் யோஷித ராஜபக்ஷ நிதி தொடர்பாக திருப்திகரமான விளக்கத்தை அளிக்க முடியவில்லை எனக் கண்டறியப்பட்டதை அடுத்து, பணமோசடிச் சட்டத்தின் கீழ் இருவர் மீதும் பொலிஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

விசாரணையின்படி, டெய்சி பாரஸ்டுடன் பராமரிக்கப்படும் கூட்டுக் கணக்கு உட்பட, நிலையான வைப்புத்தொகை மற்றும் வங்கிக் கணக்குகளில் கேள்விக்குரிய நிதி வைக்கப்பட்டது.

வழக்கின் சந்தேக நபராக பாரஸ்டைப் பெயரிடுமாறு சட்டமா அதிபர் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

இதன் விளைவாக, பணமோசடிச் சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டு, யோஷித ராஜபக்ஷ மற்றும் பாரஸ்ட் இருவரும் சந்தேக நபர்களாக ஞாயிற்றுக்கிழமை (11) கடுவலை நீதிவான் நீதிமன்றத்தில் முறைப்படி பெயரிடப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *