இந்தியா

தசை செயலிழப்பை ஏற்படுத்தும் ‘கில்லியன் பேர் சிண்ட்ரோம் நோய்’ – புனேவில் 73 பேர் பாதிப்பு

மகாராஷ்ட்ரா மாநிலம் புனேவில் கில்லியன் பேர் சிண்ட்ரோட் எனும் நோயினால் சுமார் 73 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

திடீரென இந்த ஆட்டோ இம்யூன் நோய் அதிகரித்துள்ளமையால் சுகாதாரத்துறை மிகத் தீவிரமாக இந் நோய் நிலைமை குறித்து அவதானித்து வருகிறது.

நமது நோய் எதிர்ப்பு மண்டலம் நம் உடலின் ஆரோக்கியமான செல் பகுதிகளை தாக்குவதே கில்லியன் பேர் சிண்ட்ரோம் ஆகும்.

இந்த நோய் முதலில் தசைகளை இயக்கும் நரம்புகளை பாதிக்கிறது. பின் கை, கால் தசைகள் வலுவிழக்கும். தொடர்ந்து தசை செயலிழப்பு ஏற்படும்.

இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு, தண்ணீர் எடுத்துக்கொள்வதில் சிரமம் ஏற்படும். பேசுவதில் தடை ஏற்படும், உயர் இரத்த அழுத்தம், சுவாசிப்பதில் சிரமம் போன்றவை ஏற்படும் என கூறப்படுகிறது. இது பெரியவர்களையே அதிகமாக பாதிப்பதாக கூறப்படுகிறது.

அதன்படி புனேயில் இந் நோயினால் 47 ஆண்கள் 26 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு அனைவருக்கும் வெண்டிலேட்டர் மூலம் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

ஆனால், இதுவொரு தொற்றுநோய் அல்ல. என மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என மகாராஷ்ட்ரா சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *