இந்தியா

இந்துத்துவா சக்திகளை அழிக்க விஜய் இண்டியா கூட்டணிக்கு வர வேண்டும் – தமிழ்நாடு காங்கிரஸ் அழைப்பு

“இந்துத்துவா சக்திகளை அழிக்க விரும்பினால் விஜய் இண்டியா கூட்டணிக்குதான் வர வேண்டும்.” என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

முன்னாள் மத்திய அமைச்சரும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவருமான வாழப்பாடி கே. ராமமூர்த்தி பிறந்த தினத்தை ஒட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட செல்வப்பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் பல்வேறு கேள்விகளும் எழுப்பப்பட்டன. அதில் விஜய் குறித்த கேள்விக்கு, “இந்துத்துவா சக்திகளை அழிக்க விரும்பினால் விஜய் இண்டியா கூட்டணிக்குதான் வர வேண்டும்” என அவர் கருத்து தெரிவித்தார்.

செல்வப்பெருந்தகை பேசியதாவது: விஜய் அவருடைய மாநாட்டில் மதவாத சக்திகளுக்கு எதிராக செயல்படுவோம் என்றார். எதை வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் ஒழித்துவிடலாம், ஓரங்கட்டிவிடலாம். ஆனால் இந்துத்துவா சக்திகளை, மதவாத சக்திகளை ஓரங்கட்ட வேண்டும் என்று விஜய் விரும்பினால், இண்டியா கூட்டணிக்கு வருவதே அவருக்கும் நல்லது அவருடைய கொள்கை, கோட்பாட்டுக்கும் நல்லது. இதை நான் யதார்த்தமாக நாட்டின் ஒரு குடிமகனாகச் சொல்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *