Uncategorized
அவுஸ்திரேலியாவில் யாழ் பெண் தவறான முடிவெடுத்து உயிர் மாய்ப்பு

அவுஸ்திரேலியாவில் யாழ்.புன்னாலைக்கட்டுவன் பகுதியைச் சேர்ந்த குடும்பப் பெண்ணொருவர் புதன்கிழமை பிற்பகல் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.
இந்தப் பெண் குடும்பத்துடன் அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து வந்தார். இந் நிலையில் நேற்று முன்தினம் பிற்பகல் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
வாசவன் உஷா (வயது- 54) என்ற ஒரு பிள்ளையின் தாயே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பாக அந்நாட்டுப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
![]()