இந்தியா

வயநாடு மண்சரிவு; காணாமல் போனவர்களை உயிரிழந்தவர்களாக அறிவிக்க முடிவு

கேரளா மாநிலம் வயநாட்டில் கடந்த வருடம் ஜூலை 30 ஆம் திகதி கனமழையின் காரணைமாக பாரிய மண்சரிவு ஏற்பட்டது.

இதில் சுமார் 263 பேர் உயிரிழந்ததோடு, 35 பேரைக் காணவில்லையென கூறப்பட்டது.

இந்நிலையில் காணாமல் போனவர்களை உயிரிழந்துவிட்டதாக அறிவிக்க கேரள அரசு தீர்மானித்துள்ளது.

இதன் மூலம் காணாமல் போனவர்களின் குடும்பத்தாருக்கு நிவாரண உதவிகள் கிடைக்கும்.

இது தொடர்பில் கேரள அரசு கூறியிருப்பதாவது,

“மண் சரிவில் காணாமல் போனவர்கள் குறித்து ஆராய குழுக்கள் அமைக்கப்படும். இக்குழு காணாமல் போனவர்களின் பட்டியலை சரி பார்த்து மாவட்ட பேரிடர் நிர்வாக ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கும்.

இப் பட்டியலை குறித்த ஆய்வுக்குழு ஆராய்ந்த மாநில அளவிலான குழுவுக்கு அனுப்பி வைக்கும்.

வருவாய் மற்றும் உள்துறை முதன்மை செயலாளர்கள் அடங்கிய குழு இந்த பரிந்துரையை ஆராய்ந்து இறுதிப் பட்டியலை அரசுக்கு அனுப்பி வைக்கும்.

இதன் அடிப்படையில் மாநில அரசு காணாமல் போனவர்களை உயிரிழந்தவர்களாக அறிவித்து, அவர்களது இறப்புச் சான்றிதழ் மற்றும் உரிய நிவாரண உதவிகளை அவர்களது குடும்பத்தினருக்கு வழங்கும்” என அதில் கூறப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *