Uncategorized

விடுதியில் குழந்தை பெற்ற கல்லூரி மாணவி!

இந்தியாவின் ஆந்திரா மாநிலம் பிரகாசம் மாவட்டம் தர்ஷி பகுதியை சேர்ந்தவர் 19 வயது இளம்பெண். இவர் குண்டூரில் உள்ள சமூக நலத்துறை அரசு மாணவியர் விடுதியில் தங்கி இருந்து பார்மசி கல்லூரியில் படித்து வருகிறார்.

20 ஆம் திகதி இரவு மாணவிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து தனியாக விடுதியின் மாடிக்கு சென்ற மாணவிக்கு சிறிது நேரத்தில் பெண் குழந்தை பிறந்தது. இதனைக் கண்ட விடுதி வார்டன் மற்றும் சக மாணவிகள் குழந்தை பெற்ற மாணவியை மீட்டு சிகிச்சைக்காக அரசு வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

மாணவிக்கு விடுதியில் குழந்தை பிறந்த சம்பவம் குறித்து சமூக நலத்துறை அதிகாரி மதுசூதனன், கலெக்டர் நாகலட்சுமிக்கு தெரிவித்தார். விடுதியில் உள்ள மாணவிகளிடம் அலட்சியமாக நடந்து கொண்டதாக விடுதி வார்டன் பணி நீக்கம் செய்யப்பட்டார்.

இது குறித்து விசாரணை நடத்த குழு அமைத்து கலெக்டர் உத்தரவிட்டார். அதிகாரிகள் சிறுமியிடம் நடத்திய விசாரணையில் தனது உறவினர் ஒருவரிடம் கடந்த 7 ஆண்டுகளாக நெருங்கி பழகி வந்ததால் கர்ப்பமானதாகவும், கர்ப்பம் அடைந்தது வெளியே தெரியாமல் இருப்பதற்காக இறுகிய ஆடைகளை அணிந்து வந்ததாகவும் தெரிவித்தார்.

மாணவியின் கர்ப்பத்திற்கு காரணமான அவரது உறவினர் ஒருவரை பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *