செய்திகள்

ஜனாதிபதி அடுத்த மாதம் இந்தியாவுக்கு விஜயம்!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் டிசம்பர் மாதம் இந்தியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் டிசம்பர் மாத நடுப்பகுதியில் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்வார் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தமது விஜயத்தின் போது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் விசேட கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், புதிய அரசாங்கம் நாட்டை வலுப்படுத்தும் நோக்கில் செயற்பட்டு வருவதனையும், மக்களுக்கு நிலையான மற்றும் சிறந்த நாட்டை உறுதி செய்யும் என்பதையும் உலகிற்கு வெளிப்படுத்த விரும்புவதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *