இந்தியா

இந்தியா – வங்கதேச கிரிக்கெட் தொடரை தடை செய்ய கோரி இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

சென்னை: சென்னையில் நடைபெறும் இந்தியா – வங்கதேசம் இடையிலான கிரிக்கெட் போட்டி தொடரைபிசிசிஐ உடனடியாக தடை செய்ய வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சார்பில் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னையில் நடைபெற்று வரும் இந்தியா வங்கதேசம் இடையிலான கிரிக்கெட் போட்டி தொடரை தடை செய்யக் கோரி, இந்து மக்கள் கட்சி சார்பில் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் முன்பாக நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத், மாநில செயலாளர் குருமூர்த்தி, அமைப்பு குழு பொதுச் செயலாளர் ஆனந்த், அலுவலக செயலாளர் குமாரவேல், கோவை மாவட்ட பொதுச் செயலாளர் சூர்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்தலைமை தாங்கினார். அப்போது செய்தி யாளர்களிடம் அவர் கூறியதாவது: வங்கதேச மக்களை பாகிஸ்தான் கொடுமைப்படுத்தியபோது, இந்திய ராணுவம் அங்குசென்று வங்கதேசம் என்ற நாட்டை உருவாக்கிக்கொடுத்தது. அப்போது 26 சதவீதம் இந்துக்கள் அங்கு இருந்தார்கள். தற்போது, அங்கு 7 சதவீதஇந்துக்கள்தான் இருக்கிறார்கள். அவர்கள் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் இருக்கிறார்கள்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *