நேசம் நாடும் நெஞ்சங்கள்

உருக்கமான வேண்டுகோள்!

அன்புடையீர் வணக்கம் ,
நாகப்பட்டினம் மாவட்டம் ,வேதாரணியம் தாலுகா ,துளசியபட்டினத்தில் உள்ள குடும்பத்தில் உள்ள மூன்று பிள்ளைகளும் கை,கால்கள் முற்றிலும் செயல்படாமல் படுக்கையில் உள்ளனர் ,கணவர் முன்பு சிறிய கடை வைத்து ,பால் வியாபாரம் செய்து ,தனது மூன்று செயல்பட முடியாத குழந்தைகளை கவனித்து வந்தார் ,தற்போது அவர் நோய்வாய்ப்பட்டு ,வெளியில் செல்ல முடியாமல் வீட்டிலேயே உள்ளார் ,அவர் மனைவி ,தனது மூன்று செயல்பட முடியாத குழந்தைகளையும் ,நோய்வாய்ப்பட்ட கணவரையும் பராமரிக்க முடியாமல் மிக மிக கஷ்டப்பட்டு வருகிறார் ,மேலும் தற்போது ,ஊரடங்கு இருப்பதால் ,எங்கும் வெளியில் சென்று உதவி கேட்க முடியாமல் தவித்து வருகிறார் ,மேலும் தனது கணவர் நடத்தி வந்த வியாபார கடையினை தொடர்ந்து நடத்த தேவையான முதலீடு இல்லாமல் ,முற்றிலும் வருமானம் இல்லாமல் இந்த குடும்பமே மிகுந்த துயரத்தில் உள்ளது .எனவே இந்த செய்தியினை கேள்விப்படும் கருணை உள்ளம் கொண்டவர்கள் ,இந்த குடும்பத்தின் அளவிட முடியாத கஷ்டத்தினை தீர உதவிட வேண்டுமாய் மிகவும் பணிவுடன் வேண்டுகிறேன் .
தங்கள் ,
த,ஜெகதீசன் ,
ஸ்ரீ ராகவேந்திரா மாற்றுத்திறனாளிகள் அறக்கட்டளை ,
திருத்துறைப்பூண்டி Mobile:9865023911,8667078242
பயனாளியின் பெயர் மற்றும் செல் நம்பர் : து .ஜெயா — 7598033541

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *