பலதும் பத்தும்

24 மணி நேரத்தில் 23,000 மரங்கள் நட்டு சாதனை படைத்துள்ள கனேடியர்

கனேடியர் ஒருவர், 24 மணி நேரத்தில் 23,060 மரங்கள் நட்டு உலக சாதனை படைத்துள்ளார்.

அன்டோயின் மோசஸ் என்னும் கனேடியர், ஒரே நாளில் அதிக மரங்களை நட்டவர் என்னும் சாதனையை படைத்துள்ளார்.

மோசஸ், கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்திலுள்ள La Crete என்னுமிடத்தில், ஒரே நாளில் 23,060 மரங்களை நட்டு உலக சாதனை படைத்துள்ளார்.

ஆறு ஆண்டுகளாக மோசஸ் இதுபோல் மரங்களை நட்டுவரும் நிலையில், இம்மாதம், அதாவது, ஏப்ரல் மாதம் 22ஆம் திகதி புவி தினம் என்பதால் தற்போது இந்த செய்தி சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *