கவிதைகள்

தீக்கடைக்கோல்!…. ( கவிதை ) …. சங்கர சுப்பிரமணியன்.

அன்னைத் தமிழுக்கும்ஆசான் வள்ளுவனுக்கும்இக்கவியரங்கின் தலைவர் கவியருவி திரு. அப்துல் காதர் அவர்களுக்கும்ஈடற்ற கவிஞர் பெருமக்களுக்கும்உயிருக்கிணையான உலகத்தமிழர் அனைவருக்கும்ஊடகத் துணைபுரியும் தமெரிக்கா தொலைக்காட்சிக்கும்எல்லா அமைப்புக்களுக்கும்ஏற்றமிகு தில்லி கலை இலக்கிய பேரவைக்கும்ஐயம் திரிபரஒப்பற்ற முறையில்ஓங்கி உரைத்திடுவேன்ஔவையுரைத்த அருந்தமிழில்அஃதாம் என் வணக்கம்.

பாக்களாம் கவிதைப் பூக்களில்ஈக்களாய் மொய்க்கும் என்னிடம்தாக்கலாய் வந்து தந்த மலைப்புதீக்கடைக்கோல் எனும் தலைப்புஎப்புறம் திரும்பினாலும் கடல்சூழஇப்புவியில் நான் வாழும் நாட்டில்தப்பாது காட்டுத்தீ பற்றி எரிவதால்இப்படி தீயுடன் தலைப்பு தந்தீரோதீப்கடைக்கோல் எனக்கேட்டதும் முதன்முதலில்டீக்கடை கொதிகலன் வந்தது என் நினைவில்இன்று சூடாக்க உதவுகிறது தீக்குச்சிஅன்று சூடேற்ற உதவியது தீக்கடைக்கோல்இருளில் வழிதெரியாது தவிக்கையில்மருளும் மக்கள் எவருக்கும் அந்நாளில்தருகின்ற நம்பிக்கையெனும் கீற்றாய்இருந்ததும் தீக்கடைக்கோல் அன்றோதீ என்ற சொல்லைச் சொன்னாலும்அச்சொல் நாவைச்சுடுவதும் இல்லைதீக்கடைக்கோலை கூரையில் சொருகினாலும்அது கூரையை எரிப்பதும் இல்லைதோற்றுவிக்கும் முறை மாறினாலும்தோன்றுவதில் மாற்றம் ஏதுமில்லைதீக்கடைக்கோலில் மறைந்திருப்பதும் தீதீக்குச்சியில் அடைபட்டிருப்பதும் தீகாலங்கள் மாறினாலும்காட்சிகள் மாறவில்லைகோலங்கள் மாறினாலும்குணங்கள் மாறவில்லைகடைந்தால் அன்று வந்ததும் நெருப்புஉரசினால் இன்று வருவதும் அதே நெருப்புஅன்று கண்டதும் அதே தீ தான்சச்சச்சாஇன்று காண்பதும் அதே தீ தான்சச்சச்சாஎன்றும் உள்ளது ஒரே தீ தான்சச்சச்சாஇருளை அகற்றவும் அதே தீ தான்ஆ…ஆ…இருளை அகற்றவும் அதே தீ தான்கோல் கடைந்தே தீ உண்டானது அன்றுகோல் தேய்ந்து தீக்குச்சியானது இன்றுஉருளும் வாழ்க்கையில் தினமும்வரும் மாற்றங்கள் என்றும் நிகழும்கருப்பையினில் வளர்கின்ற மகவும்கருவாக குழாயில் மாறி உருவாகும்கருவியாயிருந்த தீக்கடைக்கோல்உருமாறியும் வந்தது தீக்குச்சியாய்அக்கினிக்குஞ்சு ஒன்றைக் கண்டேன்என்றான் தத்துவம் சொன்ன கவிபாரதிஅக்குஞ்சு எதுவென எனைக் கேட்டால்தீக்கடைக்கோல் கொடுத்த தீப்பொறியேஅழியும் தீக்கடைக்கோல் பொறியால் காடும்போக்கும் இருளையும் அப்பொறி தரும் ஒளிஆக்கும் உணவையும் அதுதரும் நெருப்பும்அழிக்கும் உடலையும் சிதைநெருப்பாகியும்ஆட்டுக்கல் என்றாலே தெரியாதபோதுகடைக்கோல் எனக்கு எவ்வாறு தெரியும்தீக்கடைக்கோல் எவ்வாறு தெரியும் ஐயா?என்றான் மாணவன் இன்று ஆசானிடம்ஆட்டுக்கல்லில் நாம் அரைக்கஆட்டுக் கல்லோ மாவரைக்கும்என்பதை நீ முதலில்அறிவாய்தீக்கடைக்கோலை கடைந்தால்தீப்பொறி  தெறித்துக் கிளம்பும்என்பதும் அறியென்றார் ஆசான்எதிர்பாராததை எதிர்பாருங்கள்என்கிறது ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிதெரியாததை தெரிந்து கொள்ளுங்கள்என்பதுதான் இங்கே கவியரங்க புரட்சி

கேளடா மானிட என்றான் பாரதிகேளாத சமுதாயத்தை நோக்கிவெள்ளை நிறத்திலொரு குட்டிசாம்பல் நிறத்திலுமொரு குட்டிஎல்லாமே பூனைக்குட்டி என்றான்மக்களை மட்டும் ஏன் பிரித்தார்மனம்மாறாது திரியும் இம்மாந்தர்சாதி சொல்லி மக்களை பிரித்தமக்களிடம் பாரதி சொன்னாலும்மக்களோ சாதியாகவே பார்த்துமாறாது இன்னும் வாழ்கின்றனரேதீக்கடைக்கோல் தந்த தீயும்தீக்குச்சி பற்றவைத்த தீயும்வேறென சொன்னால் சரியோஅவன்பெற்ற அக்குழந்தையும்இவன்பெற்ற இக்குழந்தையும்இணைவது தவறெனில் முறையோதீயுண்டாக்க தீக்கடைக்கோல் போலநோயாம் சாதிக் கொடுமைகள் தீர்க்கஏதுமொரு கோலிங்கு ஆக்கிட உளதோதீதேதுமின்றி  தீரவும் இங்கு வழியுளதோ-சங்கர சுப்பிரமணியன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *