நெல்லிக்காய் சாப்பிட்டால் இவ்வளவு பிரச்சனையா? யார் தவிர்க்க வேண்டும்?

ஆரோக்கியத்தின் பொக்கிஷமாகத் திகழும் நெல்லிக்காய், சில குறிப்பிட்ட உடல்நலக் குறைபாடு உள்ளவர்களுக்குப் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என மருத்துவ ஆய்வுகள் எச்சரிக்கின்றன.
யாரெல்லாம் நெல்லிக்காயை எச்சரிக்கையுடன் கையாள வேண்டும்?
மருத்துவ இதழான ‘ஜர்னல் ஆஃப் எத்னோஃபார்மகாலஜி’ வழங்கிய தரவுகளின் அடிப்படையில், நெல்லிக்காய் உட்கொள்வதில் உள்ள அபாயங்கள் இதோ:
குறைந்த இரத்த அழுத்தம் : இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் தன்மை நெல்லிக்காய்க்கு இருப்பதால், ஏற்கனவே குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இது மயக்கம் மற்றும் தலைச்சுற்றலை உருவாக்கும்.
அறுவை சிகிச்சை செய்பவர்கள்: இரத்தத்தை மெலிதாக்கும் பண்பு நெல்லிக்காயில் உள்ளது. எனவே, அறுவை சிகிச்சை அல்லது பல் மருத்துவ சிகிச்சைக்கு 2 வாரங்களுக்கு முன்பே இதை நிறுத்துவது அவசியம்.
சிறுநீரகக் கற்கள் : நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி உடலில் ‘ஆக்சலேட்’ அளவை அதிகரிக்கும். இது சிறுநீரகக் கற்கள் உள்ளவர்களுக்குப் பாதிப்பைத் தீவிரப்படுத்தும்.
அமிலத்தன்மை : நெல்லிக்காயின் அமிலத்தன்மை காரணமாக, வெறும் வயிற்றில் இதை உட்கொள்வது நெஞ்செரிச்சல் மற்றும் வயிற்றுப் புண் உள்ளவர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்.
கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் நெல்லிக்காயைச் சிறிய அளவில் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
ஆனால், அடர்த்தியான சத்து மாத்திரைகளாகவோ அல்லது சாறாகவோ கொள்வதைத் தவிர்க்க வேண்டும். ஒவ்வாமை உள்ளவர்கள் வீக்கம் அல்லது அரிப்பு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.
இயற்கை உணவுகள் ஆரோக்கியமானவை என்றாலும், உங்கள் உடலின் நிலையைப் பொறுத்து அளவோடு பயன்படுத்துவதே சிறந்தது.
![]()