இலங்கை
கோட்டாவின் வரிசை அனுரவுக்கு! நான் ஜனாதிபதியாகியிருந்தால் தீர்வை வழங்கியிருப்பேன்!

தான் ஜனாதிபதியாகியிருந்தால் எரிபொருள் வரிசைக்கு தற்போது உரிய தீர்வு வழங்கப்பட்டிருக்கும் என ஜன செத பெரமுன கட்சியின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கோட்டாவின் வரிசை அனுரவுக்கு வந்துள்ளது. அநுரவின் வரிசை யாருக்கு செல்லப்போகின்றது என தெரியவில்லை. வரிசையில் நின்று நின்று கடைசியில் அந்த வரிசை எனக்கும் வருமா என்று தெரியவில்லை.
ஆனால் இந்த வரிசைக்கு, நான் ஒரு ஜனாதிபதியாக இருந்தால் சரியாக தீர்வுகளை வழங்கியிருப்பேன் என அவர் தெரிவித்தார்.
![]()