நான் உயிருடன் தான் இருக்கின்றேன் ; வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நெதன்யாகு

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டாக இணைந்து தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உள்பட பலர் உயிரிழந்தனர்.
இதையடுத்து, மத்திய கிழக்கில் அமெரிக்க படைத்தளம் உள்ள நாடுகள் மீதும், இஸ்ரேல் மீதும் ஈரான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
சமூகவலைதளத்தில் வதந்தி
இதனிடையே, ஈரான் நடத்திய தாக்குதலில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கொல்லப்பட்டதாக கடந்த சில நாட்களாக சமூகவலைதளத்தில் வதந்தி பரவியது. மேலும், தாக்குதலில் நெதன்யாகு கொல்லப்பட்டதுபோன்ற ஏஐ வீடியோக்கள், புகைப்படங்களும் சமூகவலைதளத்தில் வைரலாகின.
இந்நிலையில், ஈரான் தாக்குதலில் கொல்லப்பட்டதாக பரவிய வதந்திக்கு பெஞ்சமின் நெதன்யாகு இன்று முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இஸ்ரேலில் உள்ள கபேவுக்கு சென்ற அங்கு காபி வாங்கிக்கொண்டு நிற்கும் வீடியோவை நெதன்யாகு தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
நான் என்ன ஆகிவிட்டதாக அவர்கள் கூறினர்? என்ற கேப்ஷனுடன் பகிரப்பட்டுள்ள அந்த வீடியோவில் நெதன்யாகு கபேவில் ஒரு கையில் காபியுடன் உரையாடினார் வீடியோவில் நெதன்யாகு கூறுயதாவது,
ஈரான், லெபனானில் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறோம். அந்த நடவடிக்கை என்ன என்று தற்போது நான் கூற முடியாது என்றார்.
![]()