அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ள 2015 இல் ராஜபக்சக்கள் செய்யவிருந்த பாரிய சூழ்ச்சி

ஈஸ்டர் குண்டுத் தாக்குதலின் பின்னணியில் ராஜபக்சக்கள் இருப்பது வெளிப்படையாகக் கூறப்பட்டாலும் அது தொடர்பிலான விசாரணைகள்தான் தற்போது இடம்பெற்று வருகின்றது.
இது இவ்வாறு இருக்கின்ற நிலைமையில் 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் இடம்பெற்ற தினத்தன்று ராஜபக்சக்கள் பாரிய சூழ்ச்சி ஒன்றை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு மைத்திரிபால் ஜனாதிபதியாக அறிவிக்கப்பட்ட நிலையில் மகிந்த ராஜபக்ச அலரிமாளிகையை விட்டு வெளியேறும் போது தனது காரில் வெளியேறாமல் உலங்கு வானூர்தியில் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த உலங்கு வானூர்தியில் பாதுகாப்பாக செல்வதற்கு ரணில் விக்ரமசிங்கவால் உதவி செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், அலரி மாளிகையை விட்டு வெளியேறுவதற்து முன்பதாக ஒரு குழப்பத்தை ஏற்படுத்த ராஜபக்ச தரப்பு முயற்சித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
![]()