பெண்ணை “உருளைக்கிழங்கு” என கிண்டல் செய்த நபருக்கு 97 இலட்சம் அபராதம்

இங்கிலாந்தின் லீட்ஸ் நகரில் உள்ள ‘வெஸ்ட் லீட்ஸ் சிவில்ஸ்’ (West Leeds Civils) என்ற பொறியியல் நிறுவனத்தில் கணக்காளராகப் பணிபுரிந்த அயர்லாந்தைச் சேர்ந்த பெர்னாரெட் ஹேய்ஸ் (Bernadette Hayes) என்ற 55 வயது பெண், தனது நிறுவன இயக்குநரால் இன ரீதியான துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
வட்ஸ்அப் மற்றும் நேரடி உரையாடல்கள் மூலம் சுமார் 6 மாத காலம் தொடர்ந்த இந்தத் துன்புறுத்தலால் தனக்குப் பதற்றம் மற்றும் தூக்கமின்மை ஏற்பட்டதாகக் கூறி ஹேய்ஸ் நீதிமன்றத்தை நாடினார்.
இதனை ஒரு “நகைச்சுவை” என அட்கின்ஸ் வாதிட்ட போதிலும், ஒருவரின் பூர்வீகத்தை வைத்து மீண்டும் மீண்டும் கேலி செய்வது இன ரீதியான துன்புறுத்தல் என்று பிரிட்டன் தொழிலாளர் தீர்ப்பாயம் தீர்ப்பளித்தது.
இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 27,000 பவுண்டுகள் (சுமார் 97 இலட்சம் இலங்கை ரூபாய்) அபராதம் வழங்குமாறு அந்த நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
![]()