உலகம்

லண்டன் அல் குட்ஸ் பேரணிக்கு தடை விதிப்பு

இந்த வார இறுதியில் லண்டனில் முன்னெடுக்க திட்டமிடப்பட்டிருந்த பாலஸ்தீன ஆதரவு பேரணி தடை செய்யப்பட்டுள்ளது.

பெருநகர பொலிஸார் விடுத்த கோரிக்கையினை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உள்துறைச் செயலாளர் ஷபானா மஹ்மூத் தெரிவித்துள்ளார்.

இந்த பேரணியால் ஏற்படும் கடுமையான ஆபத்தைக் கருத்திற்கொண்டு பெருநகர பொலிஸார் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், போராட்டத்தின் அளவு மற்றும் எதிர்-போராட்டங்கள்” என்பனவும் இதற்குக் காரணம் என்று உள்துறைச் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

லண்டனில் ஆண்டுதோறும் நடைபெறும் அல் குத்ஸ் தின பேரணி முன்னெடுக்கப்படுகின்றது. இது பாலஸ்தீன மக்களுடன் ஒற்றுமையை வெளிப்படுத்தும் ரமழான் இறுதியில் நடைபெறும்.

இருப்பினும், ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்களின் போது கொல்லப்பட்ட ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அலி கமேனிக்கு ஏற்பாட்டாளர்கள் ஆதரவு தெரிவித்ததை இந்த பேரணி விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது.

இந்தப் பேரணி ஈரானிய ஆட்சிக்கு வெளிப்படையாக ஆதரவளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே, குறித்த பேரணிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், பேரணியை தடை செய்யும் முடிவை இஸ்லாமிய மனித உரிமைகள் ஆணையம் (IHRC)கண்டித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *